Friday, December 23, 2011

இயற்கை உணவு

அன்றாட வாழ்வில் உடல் ஆரோக்கியத்திற்கு உணவின் பங்கு பற்றி கூற உள்ளேன் ! ! !

மனிதன் வாழ்வில் மிக முக்கியமான இடம் வகிப்பது உணவு.
உணவே ஒருத்தர் எத்தனை காலம் வாழ முடியும் என்பதை தீர்மானிக்கிறது

இயற்கையே நோய் தீர்க்கும் பல அறிய உணவு வகைகளை நமக்கு தந்து இருந்த போதிலும், அதனை சரி வர பயன் படுத்தாததன் விளைவே இன்று மனித குலம் பல்வேறு வகையான நோய்க்கு ஆட்பட்டு மருத்துவமனையே கதியாக கிடக்கவேண்டியசூழ்நிலை ஏற்பட்டு விட்டது...

நமது உடல் நலத்துக்கு தேவையான பல வித ஊட்டச்சத்துகளை தரும் உணவு தானியங்களான கம்பு சோளம், தினை, ராகி, சாமை அரிசி போன்றவற்றை மறந்து விட்டோம்.. வெள்ளை நிறத்தில் அரிசி சாதம்,இட்லி, தோசை என மூன்று வேளையும் சாப்பிடுவது தான் நாகரிகம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

இதன் விளைவு, நல்ல உடல் நலதுடன் இருக்க வேண்டிய மனிதன், உடல் நலம் கேட்டு நோயுடன் வாழவேண்டிய நிலை...
 

காலம் காலமாக கடை பிடித்து கொண்டு இருந்த நமது பாரம்பரிய உணவு முறைகளை மறந்து விட்டு, நுண் சத்துக்களும், நார் சத்துகளும் நீக்கப்பட்ட,
கண்ணுக்கு கவர்ச்சியான உணவை சாப்பிடும் போது உடல் உறுப்புகளின் இயக்கதிற்கு போதுமான ஆற்றல் கிடைக்காமல் குளறுபடி ஏற்படும். இதுவே நோய் தோன்ற காரணம் !


மேலும் உணவை உண்ணும் முறையிலும் சமைக்கும் முறையிலும் சரியான முறையை கடை பிடிக்க வேண்டும் ! !
நமது ஆரோக்கியதிற்கு அடிபடையானது உணவும், உண்ணும் முறையும் தான் !
உணவின் தரம் எப்படி இருக்க வேண்டும் ?
எந்த நேரத்தில் சாப்பிடலாம் ?
எவ்வளவு சாப்பிடலாம் ?
எவ்வாறு சாபிடலாம் ?
என்பவற்றை அறிந்து, அதன் படி உணவு பழக்க வழக்கத்தை அமைத்து கொண்டால் நோயின்றி நலமாக வாழலாம் !

ஆனால், நாம் உணவு கோட்பாடுகளை மறந்து விட்டு ஆரோக்கியத்தை எங்கெங்கோ தேடி கொண்டு இருக்கிறோம் ! !



Tuesday, December 6, 2011

ஆங்கில புத்தாண்டும், நமது பாரத வர்ஷத்தின் கலாச்சார கேடும் !


ஆங்கில புத்தாண்டு என்பது  கிறிஸ்தவர்களின் புத்தாண்டு !
அதை நம் இந்துக்கள் பண்டிகை என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மாறி  கொண்டு  இருக்கிறது !

* Pub, Discothe, Dance Bar, Special Club, சென்று கூத்தடித்து கொண்டு  IT துறையினர் நமது கலாச்சாரத்தை கேளிகூத்தாகி கொண்டு இருப்பது வருத்ததிருக்கு உரிய விசயம் ! இதில் பெண்களும் அடங்கும்! அவர்களை பார்த்து மற்றவர்களும் கெட்டு போய் கொண்டு இருகிறார்கள் !

*இரவு 12 மணிக்கு WISH YOU HAPPY NEW YEAR என்று குடிபோதையில் சொல்லுவது தான் அதை விட கொடுமையான ஒன்று !

* நமது கொங்க தேசத்திலும், இந்த விஷம் வேகமாக பரவி கொண்டு இருக்கிறது. குறிப்பாக, நகரத்தில்(நரகத்தில்) வசிப்பவர்கள் கேக் வெட்டுவதும், நல்லிரவு Partyகளுக்கு சென்று குடித்து கும்மாளமடிக்கும் கேடு கெட்ட  மேற்கத்திய கலாச்சாரம் நம்மை ஆட்டி படைத்து கொண்டு இருப்பது  வருத்தமளிக்கிறது.

* பாரத வர்ஷத்தின்  பண்பாடும்,  பரத கண்டத்தின் 56 தேசத்தின் கலாச்சாரமும் நமது  தாய் போல , நமது தமழ் புத்தாண்டை கொண்டாடுவதை விட்டு விட்டு வெள்ளக்கார நாய்களின்  ஆங்கில புத்தாண்டை கொண்டாடும்  மனிதர்கள் கொஞ்சம் சிந்திச்சு பார்க்க  வேண்டும்..

*ஆகம விதிகளுக்கு புறம்பாக புத்தாண்டு இரவு அன்று, பிராமணர்கள் காசு வருகிறது என்று  இந்து கோவில்களில் நடையை  திறந்தால் இழுத்து மூட வேண்டும்.

*பார் போற்றும் பெருமை உடைய  நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வருங்கால சந்ததியினருக்கும் உணர்த்தி முன்னோடியாக இருக்க வேண்டிய நாமே இப்படி செய்யலாமா?

ஆங்கில புத்தாண்டை புறகணிப்போம் ! 
நமது பாரத கலாச்சாரத்தை காப்போம் !



என்றும் உங்கள்,
அருண் (எ) ஈ.தமிழ் இளங்கோ 

Saturday, December 3, 2011

வளர்ச்சி பாதையில் குஜராத் - ஆனால் ??

சமிபத்தில் தொழில் விசியமாக அகமதாபாத் சென்று இருந்தேன்... வெகுவாக வளர்ந்து நிற்கிறது அந்நகரம்.

*  குஜராத்தில் BRTS(Bus Rapid Transits Service) பேருந்து சேவை மிக அருமையான செயல்திட்டம்,அதாவது BRTS பேருந்து பாதையில் (LANE) அந்த பேருந்து மற்றும் அவசர சிகிச்சை பேருந்து வாகனம் மட்டும் தான் செல்ல முடியும். மற்ற மாநிலங்களில் அவசர சிகிச்சை வாகனத்திற்கு கூட வழி விடாத அவலம் இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.. 
 தில்லி  & புனேவில் பெயரளவில் இந்த சேவை இயங்கி கொண்டு இருக்கிறது...

* கடந்த 3ஆண்டுகளில் அகமதாபாத்தை சுற்றிலும் 150 மேம்பாலங்கள் கட்டப்பட்டு இருப்பது பெரும் சாதனை தான் !

* Narol Industrial ஏரியாவில் 100க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியருப்புகள் (Apartments)  உயர்ந்து  கொண்டு  இருப்பதை பார்க்கும் போது குஜராத்தின் வருங்கால வளர்ச்சியும் பிரகாசமாக தெரிகிறது !

* கடலில் இருந்து CNG எரிவாயு எடுப்பதால் அங்கு உள்ள ஆட்டோக்கள் குறைந்த கட்டத்தில் சேவை அளிக்கிறார்கள்.

* ஒரு இஸ்லாமிய ஆட்டோக்காரர் மோடியின் ஆட்சியை வெகுவாக புகழ்ந்தார்,அதுவே மோடியின் நல்லாட்சிக்கு கிடைத்த மணிமகுடம் !

*  குஜராத்தின் வளர்ச்சி போல மற்ற மாநிலங்களும் வளர்ச்சி அடைந்தால் இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் தடுக்க முடியாது !


ஆனால், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு தான் வளர்ச்சி அடைகிறது. அப்படி பட்ட வளர்ச்சி நமக்கு தேவையா? என்ற கேள்வி எழுகிறது.