Friday, December 23, 2011

இயற்கை உணவு

அன்றாட வாழ்வில் உடல் ஆரோக்கியத்திற்கு உணவின் பங்கு பற்றி கூற உள்ளேன் ! ! !

மனிதன் வாழ்வில் மிக முக்கியமான இடம் வகிப்பது உணவு.
உணவே ஒருத்தர் எத்தனை காலம் வாழ முடியும் என்பதை தீர்மானிக்கிறது

இயற்கையே நோய் தீர்க்கும் பல அறிய உணவு வகைகளை நமக்கு தந்து இருந்த போதிலும், அதனை சரி வர பயன் படுத்தாததன் விளைவே இன்று மனித குலம் பல்வேறு வகையான நோய்க்கு ஆட்பட்டு மருத்துவமனையே கதியாக கிடக்கவேண்டியசூழ்நிலை ஏற்பட்டு விட்டது...

நமது உடல் நலத்துக்கு தேவையான பல வித ஊட்டச்சத்துகளை தரும் உணவு தானியங்களான கம்பு சோளம், தினை, ராகி, சாமை அரிசி போன்றவற்றை மறந்து விட்டோம்.. வெள்ளை நிறத்தில் அரிசி சாதம்,இட்லி, தோசை என மூன்று வேளையும் சாப்பிடுவது தான் நாகரிகம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

இதன் விளைவு, நல்ல உடல் நலதுடன் இருக்க வேண்டிய மனிதன், உடல் நலம் கேட்டு நோயுடன் வாழவேண்டிய நிலை...
 

காலம் காலமாக கடை பிடித்து கொண்டு இருந்த நமது பாரம்பரிய உணவு முறைகளை மறந்து விட்டு, நுண் சத்துக்களும், நார் சத்துகளும் நீக்கப்பட்ட,
கண்ணுக்கு கவர்ச்சியான உணவை சாப்பிடும் போது உடல் உறுப்புகளின் இயக்கதிற்கு போதுமான ஆற்றல் கிடைக்காமல் குளறுபடி ஏற்படும். இதுவே நோய் தோன்ற காரணம் !


மேலும் உணவை உண்ணும் முறையிலும் சமைக்கும் முறையிலும் சரியான முறையை கடை பிடிக்க வேண்டும் ! !
நமது ஆரோக்கியதிற்கு அடிபடையானது உணவும், உண்ணும் முறையும் தான் !
உணவின் தரம் எப்படி இருக்க வேண்டும் ?
எந்த நேரத்தில் சாப்பிடலாம் ?
எவ்வளவு சாப்பிடலாம் ?
எவ்வாறு சாபிடலாம் ?
என்பவற்றை அறிந்து, அதன் படி உணவு பழக்க வழக்கத்தை அமைத்து கொண்டால் நோயின்றி நலமாக வாழலாம் !

ஆனால், நாம் உணவு கோட்பாடுகளை மறந்து விட்டு ஆரோக்கியத்தை எங்கெங்கோ தேடி கொண்டு இருக்கிறோம் ! !



No comments:

Post a Comment